Friday, December 17, 2010

மெய்தீண்டும் மை விழியே . . .

கனவுகண்டேன் உன் கைபிடிக்க
காத்திருந்தேன் உனை மெய்யணைக்க
இருவிழிகள் பூத்திருந்தேன் இனியவளே- உனை
இதயமெங்கும் நிறைத்து வைக்க.

நீ நடந்துவரும் பாதையெங்கும்
மலர்தூவி வழிசெய்வேன் - உன்
நடையழகை நான் ரசித்து
இரு விழிகள் வியர்த்திருப்பேன்.

உன் ஓரவிழி பார்வைக்காக
ஓராயிரம்முறை வலம்வருவேன்
சுற்றம் மறந்து கட்டித்தழுவி -உலகில்
முற்றும் நீயென முடிவெடுப்பேன்.

கட்டிப் பிடித்திருப்பேன் - உனை
கரம்பிடித்து அழைத்துச்செல்வேன்.
அங்கமெங்கும் இதழ்பதித்து
அகிலம் நான் மறப்பேன்.

விழிகளால் ஜாடை செய்வேன்
மொழிகளால் மௌனம் செய்வேன் - நீ
மறுத்தாலும் நிறுத்தாமல்
சத்தமில்லா முத்தம் செய்வேன்.

உனை கட்டிலில் கிடத்திவிட்டு
சாய்ந்தனைத்து படுத்திருப்பேன் -
ஆயுள்வரை உன்னோடு
ஒவ்வொன்றாய் கனாக்காண்பேன்.

இரவுகளில் உன்னோடு
உறங்காமல் விழித்திருப்பேன் - உன்
உறவுகளில் ஒன்றாகி
உயிர்வரைக்கும் கலந்திருப்பேன்.


தொட்டுவிடும் தூரத்தில் நீ - உனை
தொடமுடியாத துக்கத்தில் நான்.

எட்டாம் மாதத்து இளம்பிறையே
பத்தாம்
மாதத்தில் பௌர்ணமி நீ...



என் மெய்தீண்டும் மைவிழியே - என்
மெய்தாண்டி
வரும்நாள் எதுவோ... !

என் உயிர் மெய் குழைத்த ஓவியமே...
என் உயிரும் மெய்யும் உனக்கே ! உனக்கே !




.

Wednesday, December 15, 2010

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் ..


                     நாளை பெருமாள் ஆலயங்களில் சொர்கவாசல் திறக்கப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் அந்த சொர்கவாசல் வழியாக செல்பவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஸ்ரீ நாராயணின் ஆசிகளோடு சுவர்க்கம் செல்வார்கள் என்பது இந்து சமய  நம்பிக்கை. அதேநேரத்தில் ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாமத்தை சொல்லுபவர்களும் சுவர்க்கம் செல்வார்கள் என்பது நம்பிக்கை.



                    
மகாபாரத போரின்போது அர்ஜுனன் பீஷ்மரை அம்புப்படுக்கையில் வீழ்த்தியபோது தர்மன் பீஷ்மரிடம் பாவங்களை போக்கி இறைவனை அடையும் வழியை எவ்வாறு அடைவது என்று கேட்கிறான். அதற்கு பீஷ்மர் முன்பெல்லாம் இறைவன் திருவடி அடைய  மிகக்கடுமையாக தவம் செய்யவேண்டும். ஆனால் கலியுகத்தில் இறைவனின் ஆயிரம் நாமங்களை சொன்னாலேபோதும். இறைவனை அடைந்துவிடலாம் என்றும் வியாசர் அருளிய விஷ்ணு சஹாஸ்ர நாமத் துதியை கூறுகிறேன் கேள் என்று தன கண்முன் நின்றுகொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை பார்த்து விழிகளால் வணங்கி தருமரிடம் கூறுகின்றார்.


அந்த சஹாஸ்ரநாமத்தை தமிழில் இதோ உங்களுக்காக...






அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;
மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:
 பூமகள் நாயக போற்றி; ஓசை
மாமத யானை உதைத்தவ போற்றி;அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;அத்தா போற்றி; அரியே போற்றி;
பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;அகவுயிர்க் கமுதே போற்றி; மாயச்
சகடம் உதைத்தாய் போற்றி; ஞானச்
சுடரே போற்றி; சொல்லுளாய் போற்றி;
உடையாய் போற்றி; உத்தமா போற்றி;
அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
கதியே போற்றி; கரியாய் போற்றி;
குறளாய் போற்றி; குருமணி போற்றி;
மறையாய் போற்றி; மாதவா போற்றி;
அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
சிந்தனைக் கினியாய் போற்றி; சிற்றாயர்
சிங்கமே போற்றி; சேயோய் போற்றி;
அங்கதிர் அடியாய் போற்றி; அசுரர்கள்
நஞ்சே போற்றி; நாதா போற்றி;
பஞ்சவர் தூதா போற்றி; பாரிடம்
கீண்டாய் போற்றி; கேசவா போற்றி;

நீண்டாய் போற்றி; நிமலா போற்றி;
முதல்வா போற்றி; முத்தா போற்றி;
அழகா போற்றி ; அமுதே போற்றி;
கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
அஞ்சனக் குன்றே போற்றி; அஞ்சன
வண்ணா போற்றி; வள்ளலே போற்றி;
அண்ணா போற்றி; அண்ணலே போற்றி;
அச்சுதா போற்றி; அச்சனே போற்றி;
அச்சுவைக் கட்டியே போற்றி; அந்தணர்
சிந்தையாய் போற்றி; சீதரா போற்றி;
அந்த முதல்வா போற்றி; அந்தரம்
ஆனாய் போற்றி; அருவா போற்றி;
வானே தருவாய் போற்றி; வேதப்
பிரானே போற்றி; பிறப்பிலி போற்றி;
இராமா போற்றி; இறைவா போற்றி;
வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
அக்கா ரக்கனி போற்றி; அங்கண்
நாயக போற்றி;  நம்பீ போற்றி;
காய்சின வேந்தே போற்றி; அங்கை
ஆழிகொண் டவனே போற்றி; அந்தமில்
ஊழியாய் போற்றி; உலப்பிலாய் போற்றி;
காரணா போற்றி; கள்வா போற்றி;
சீரணா போற்றி; கேசவா போற்றி;
உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
அரையா போற்றி; அண்டா போற்றி;
அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
அந்தணர் அமுதே போற்றி; ஆநிரை
காத்தாய் போற்றி; கருமணி போற்றி;
கூத்தா போற்றி; குறும்பா போற்றி;
ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
மூதறி வாளனே போற்றி; முதுவேத
கீதனே போற்றி; கேடிலி போற்றி;
அடர்பொன் முடியாய் போற்றி; மென்தளிர்
அடியாய் போற்றி; அமலா போற்றி;
அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
கடவுளே போற்றி; கண்ணாவாய் போற்றி;
அரவப் பகையூர் பவனே போற்றி;
குரவை கோத்த கு.கா போற்றி;
அலரே போற்றி; அரும்பே போற்றி;
நலங்கொள் நாத போற்றி; நான்மறை
தேடி ஓடும் செல்வா போற்றி;
ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
அணிவரை மார்ப போற்றி; அரிகுலம்
பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
அரிமுக போற்றி; அந்தணா போற்றி;
உரகமெல் லணையாய் போற்றி; உலகம்
தாயவ போற்றி; தக்காய் போற்றி;
ஆயர்தம் கொழுந்தே போற்றி; யார்க்கும்
அரிநவ போற்றி; அப்பனே போற்றி;
கரநான் குடையாய் போற்றி; கற்பகக்
காவன நற்பல தோளாய் போற்றி;
ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
ஆலநீள் கரும்பே போற்றி; அலையார்
வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
செப்பம துடையாய் போற்றி; சேர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
காவல போற்றி; கற்கீ போற்றி;
குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
நன்றெழில் நாரண போற்றி; நந்தா
விளக்கே போற்றி; வேதியா போற்றி;
அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
சீலா போற்றி; செல்வா போற்றி;
பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
மிக்காய் போற்றி; ஒண்சுடர் போற்றி;
சக்கரச் செல்வா போற்றி; நலனுடை
ஒருவா போற்றி; ஒண்சுடர் போற்றி;
அருமறை தந்தாய் போற்றி; ஆணிச்
செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
எம்பிரான் போற்றி; எங்கோன் போற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
பரமா போற்றி; பதியே போற்றி;
மரகத வண்ணா போற்றி; மறைவார்
விரித்த விளக்கே போற்றி; மன்றில்
குரவை பிணைந்த மாலே போற்றி;
போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
மாதுகந்த மாரபா போற்றி; முனிவரர்
விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
அழக்கொடி யட்டாய் போற்றி; அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி; ஆதி
பூதனே போற்றி; புராண போற்றி;
புனிதா போற்றி; புலவா போற்றி;
தனியா போற்றி; தத்துவா போற்றி;
நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
ஆளரி போற்றி; ஆண்டாய் போற்றி;
வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
மல்லா போற்றி; மணாளா போற்றி;
எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
வையந் தொழுமுனி போற்றி; சக்கரக்
கையனே போற்றி; கண்ணா போற்றி;
குணப்பரா போற்றி; கோளரி போற்றி;
அணைப்பவர் கருத்தாய் போற்றி; அந்தணர்
கற்பே போற்றி; கற்பகம் போற்றி;
அற்புதா போற்றி; அற்றவர் கட்கரு
மருந்தே போற்றி; மருத்துவ போற்றி;
இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
வாமா போற்றி; வாமனா போற்றி;
ஆமா றறியும் பிரானே போற்றி;
ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
ஆரெழில் வண்ண போற்றி; ஆரா
அமுதே போற்றி; ஆதிநீ போற்றி;
கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
நண்ண லரிய பிரானே போற்றி;
கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
தொல்லையஞ் சோதி போற்றி; ஞானம்
எல்லையி லாதாய் போற்றி; கவிக்கு
நிறை பொருள் போற்றி; நீதியே போற்றி;
அறந்தா னாகித் திரிவாய் போற்றி; 
  ஓம்   நமோ   நாராயணாய   ஓம்   நமோ   நமோ . . .

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language