Wednesday, November 14, 2012

கனவு


இரண்டு இமைகளும் 
இதழ்பதித் ததனால்....
இரவு என்றொரு
மலர் மலர்ந்ததினால்....
மனமெனும் வலைக்குள் 
நீ விழுந்ததினால்.......
நினைவுகள் நிஜங்களின் 
வேர் அருத்ததினால்.....
என் கரங்களின் அணைப்பில் 
நீ இருந்ததினால்.....
இதை கனவென்று உணர்ந்தாலும்
கவிதையாய் மலர்ந்தேன்

Monday, October 22, 2012

வாழ்க்கை

தேடி தேடி தொலைத்துவிட்டோம் ....
தேடலின் முடிவில் தொலைந்தே போனோம்....
தேடும் பொருள் எது அறிவோமா...
தேடலின் தேவையும் நிஜம்தானா...

என்றோ தொலைத்தோம்...  என்று கிடைக்குமோ...
தொலைத்தோம் என்பதும் நிஜம்தானா...?!
கிடைக்கும் என்பதும் நம்பிக்கையா - இல்லை
விழித்த நிலையில் நம் கனவுகளா...

எதனை தேடி ஓடுகின்றோம்...
எதற்காகத்தான் வாழுகின்றோம்.
வாழ்க்கை என்பதன் பொருள் என்ன...
வாழுதல் என்பதன் நிலை என்ன...

பணம், மனம், இனம் - இது வாழ்வா...
தினம்... தினம்...தினம்...இது வாழ்வா ...
தேடி ஓடாமல் நில்லுங்கள்....
வாழ்ந்தவர் இருந்தால் சொல்லுங்கள்...

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language