
ஈசனும் அவன்
இடம் அமர்ந்தவளும் - என்
தேசமென கொள்ளும் மனம்.
வேசமிடும் வாழ்வறுத்து
ஈசன்பதம் தனையே நினைத்தோர்
தோஷமின்றி வாழ்வார் தினம்.
மாயமாகும் தேகநேசம்
மானுடற்கு நாளும் நாசம்
நிரந்தரமாம் ஈசன் நேசம்.
மனமே...
ஈசனை நேசி...
அவன் நாமத்தை யோசி...
இறைநிலை யாசி...